wibiya widget

Yogi

Wednesday, December 9, 2009

பால்ய காலம் முதலே பாசம் என்பதை அனுபவித்தறியாத தாதாவிடம் பச்சைக் குழந்தை கிடைத்தால் எப்படி இருக்கும் ? ரவுடித் தொழிலை மறந்து குழந்தையிடம் அன்பு தேடுகிறான் யோகி. சிகரெட் பிடித்தபடி எப்போதும் சோகமாகவே தெரிகிறார் அமீர். பல படங்களில் பார்த்துச் சலித்த வழக்கமான தாதா கேரக்டர்தான்

இதிலும். அமீருக்கான ஸ்பெஷல்னு கதையில் புதிதாய் எதுவும் தெரியவில்லை. லோக்கல் தாதாவிடம் அமீர் முறைத்துக் கொள்வதும், குழந்தையை குஷிப்படுத்த ரஜினி மாதிரி ஆட்டம் போடுவதும் வெகு அழகு. ஆனால், ஒரேயொரு கொலை, சில பல திருட்டுக்களைச் செய்து விட்டு "" குழந்தைக்காக எல்லாத்தையும் விடுகிறேன்'' ன்னு அவர் சொல்வதெல்லாம் தாதாவுக்குப் பொருந்தாத கம்பீரம்.

சோகமான காட்சிகள் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் என டைரக்டருக்கு யாரோ தவறாகச் சொல்லிட்டாங்க போல. அமீரின் சிறுவயது ஃப்ளாஷ்பேக் ரசிக்கும்படியாக இல்லை. மதுமிதாவின் கேரக்டரும் அப்படியே.

மதுமிதா ஆந்திராப் பெண், பொம்மை விற்கிறாள் என்பதெல்லாம் சுவாரஸ்யமாக இருந்தாலும் அமீருடன் அவர் வந்து போகும் காட்சிகளும், பணம் வாங்கிக்கொண்டு குழந்தைக்குப் பால் கொடுப்பதும் மனதில் ஒட்டவில்லை.

சுவாதியின் குழந்தை சந்தர்ப்பவசத்தால் கடத்தப்படுவது நல்ல திருப்பம்தான். ஆனால், கூலிப்படை வைத்து வின்சென்ட் அசோகன் அந்தக் குழந்தையைக் கொல்ல முயல்வதெல்லாம் போரடிக்கும் சமாச்சாரம். அமீருடன் மெட்ராஸ் பாஷை பேசிக் கொண்டு வருகிற அந்த இரண்டு பேரும் நம்மை கவனிக்க வைக்கிறார்கள். கவிஞர் சினேகனா அது ? பேட்டை ரவுடியா நல்லாவே நடிச்சுருக்காருப்பா.

யுவனின் "சீர்மேவும் கூவத்திலே....'' பாட்டு இளைஞர்களின் ஃபேவரைட். பின்னணி இசையிலும் சரவெடி வெடித்திருக்கிறார். குருதேவ்-தேவராஜ் ஒளிப்பதிவு படத்துக்குப் பக்கபலம்.

க்ளைமாக்ஸில் ""வாடா... வாடா...'' என திமிறிக்கொண்டு எதிரிகளை அமீர் பந்தாடுவது அலுப்பாக இருக்கிறது. படம் முழுக்கவே சில ஆங்கிலப் படங்களை நினைவூட்டுவதுபோல காட்சியமைப்புகள்.தவிர்த்திருக்கலாமே ஸார் ?

0 comments:

Post a Comment

Followers